
எல்இடி தெருவிளக்குகள் மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு! எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு
சென்னை: தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதுதொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, அவரை கைது செய்ய முனைந்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், இரண்டு முறை ரெய்டும் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், நீதிமன்ற...
www.patrikai.com
புதிய மருத்துவக் கல்லூரி அனுமதி முறைகேடு: சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை: தமிழ்நாட்டில், சினிமா தயாரிப்பாளர் ஐசரிகணேஷ்-ன் வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கியதில் முறைக்கேடு...
www.patrikai.com
எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அலுவலகம், சொந்தமான 39 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வேலுமணிக்கு சொந்தமான 26 இடங்களிலும், விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று 3வது முறயைக சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை, புதுக்கோட்டை, சேலம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிகாரத்தில் இருந்தபோது, புதிதாக...
www.patrikai.com
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து 315% சேர்ந்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கருக்கு 26 சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்படுகிறது.
www.patrikai.com
கோவை போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் ரூ.28.35 லட்சம் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிரடி
கோயமுத்தூர்: கோவை மண்டல போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சென்னை எழிலகத்ததில் உள்ள போக்குவரத்துதுறை அலவலகத்தில் தமிழக போக்குவரத்து துறை துணை ஆணையராக இருப்பவர் நடராஜன் அறையிலும், அவரது உதவியாளர் முருகன் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அதில், 35 லட்சம் ரூபாய் லஞ்ச பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள் கோவையில் ரூ.28 லட்சம் லஞ்சப்பணம்...
www.patrikai.com
எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது…
நாகர்கோவில்: எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை...
www.patrikai.com
எஸ்.பி.வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்து சேர்த்ததாக முதல்தகவல் அறிக்கை பதிவு….
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்மீது வருமானத்துக்கு அதிக மாக 3,928 சதவீதம், அதாவது ரூ.51.09 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி....
www.patrikai.com
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ ( வட்டார வளர்ச்சி அதிகாரிகள்) வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொரப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மதலை முத்து, ஏமக்குடியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயராமனின் ஏரியூர் ஏ.பள்ளிப்பட்டி வீட்டிலும், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி ஆனந்தனின் அரூர் குறிஞ்சி நகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை...
www.patrikai.com
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து: முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்த 57 இடங்களில் ரெய்டு…
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து, கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள் மற்றும், தர்மபுரி மற்றும் சென்னை, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையில் 200க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன....
www.patrikai.com