ரகுபதி

@ragupathi
22 Followers
32 Following
18 Posts
மழையோடு பெய்யும் சிறு துளி நான்!
Portfoliowww.ragupathi.in

ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,
ஒரு பார்வையாளனாக,
ஒரு பறவையாக,
ஒரு ஏதேனும் ஒருவனாக

கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது, அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல.

எப்பொழும் கடல் சேர்தல் என்பது கரை சேர்வதாக முடிகிறது எனக்கு...

#தமிழ் #Tamil

உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!

நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.

#TamilMastodon #tamil #தமிழ்

இந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது
நானும், விடியலும் மட்டுமே.

இவ்வுலகம் வழக்கம்போல
காலையில் கண் விழித்து
என்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.

இவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.

மீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.

இப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது
நானும், இவ்இரவும் மட்டுமே.

#TamilMastodon #tamil #தமிழ்

இந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது
நானும், விடியலும் மட்டுமே.

இவ்வுலகம் வழக்கம்போல
காலையில் கண் விழித்து
என்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.

இவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.

மீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.

இப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது
நானும், இவ்இரவும் மட்டுமே.

#TamilMastodon #tamil #தமிழ்

உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!

நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.

#TamilMastodon #tamil #தமிழ்

ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,
ஒரு பார்வையாளனாக,
ஒரு பறவையாக,
ஒரு ஏதேனும் ஒருவனாக

கரை அமர்ந்து கடல் பார்க்கையில், இப்பெரும் கடலையும் உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது, அன்பின் சிறுகூடடைவதில் திருப்தியடையும் பெரும்மனது போல.

எப்பொழும் கடல் சேர்தல் என்பது கரை சேர்வதாக முடிகிறது எனக்கு...

#தமிழ் #Tamil

எவ்வளவு கவனமாக
மூடிவைத்தாலும் அந்தரங்க இரகசியங்கள் எளிதில் வெளிப்பட்டு விடுகின்றன தனிமையில்…

உண்மையைச் சொல்லப் போனால் எனைத்தவிர யாருமில்லா தனிமையில் என்னை யாரோ அகம் புறமாக முழுவதுமாகப் பார்ப்பதாக உணர்கிறேன்…

#Tamil #தமிழ்

தட்டியும் திறக்காத கதவுகள்,
பதில் தேடிக் காத்திருக்கும் கேள்விகள்,
சொல்லி முடிக்காத விருப்பவெறுப்புகள்,
பேசிட அழைக்காத தொடர்புகள்,
அழைத்தும் பேசிடாத தொடர்புகள்,
நிலவை விலகி நிற்கும் இரவுகள்,

இவையெல்லாம்
நாளை என்ற நாளுக்காக
மீதியிருக்கும் காத்திருப்பை மிச்சம் வைத்திருக்கிறது…

#Tamil #தமிழ்

எத்தனிமையில், எவ்விடத்தில் யார் இருப்பினும், ஏதோவொரு தூரத்தில் பேரன்பும், பெருங்கடலும் சூழ் உலகிது.

அலையாய் அவ்அன்பின் கடல் சேர்கையில், கரை சேர்கிறோம் நாம்...

#தமிழ்