இந்த இரவில் இன்னும் மிச்சமிருப்பது
நானும், விடியலும் மட்டுமே.
இவ்வுலகம் வழக்கம்போல
காலையில் கண் விழித்து
என்னோடு வீதி வந்து சேர்ந்துவிடும்.
இவ்வுலகம் நேற்று விட்டுச்சென்ற இடத்திலிருந்து தொடர்ந்து கொள்ளும் தினந்தோறும்.
மீண்டும் மீண்டு மீள முடியாத உலகைத் தேடிச் செல்கிறது இவ்இரவுகளின் பாதைகள்.
இப்போது இந்த உலகில் மிச்சமிருப்பது
நானும், இவ்இரவும் மட்டுமே.