
ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை திடீர் என பணி நீக்கம் செய்து எடுக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி திமுக அரசு ஏராளமானோரை பணி நீக்கம் செய்தது. அதன்படி, தஞ்சை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் கடந்த 2020-2021ம்...
www.patrikai.com
ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? எடப்பாடி பழனிசாமி
சென்னை: ஆவினின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆவின் பொருட்கள் பணக்காரர்களுக்கான பொருளா, ஆவின் பொருள்கள் ஏழைக்ளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா? என கேள்வி எழுப்பி உள்ளார். ஆவின் நெய் மற்றும் பட்டர் விலைகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தமிழகஅரசு அதிரடியாக விலைகளை உயர்த்தி உள்ளது. இதுநாள்வரை 70 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் 75...
www.patrikai.com
நெய்யைத் தொடர்ந்து வெண்ணையின் விலையையும் உயர்த்தியது ஆவின்…
சென்னை: தமிழகத்தில் பால், நெய் விலையைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெண்ணெய் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உள்ளது. சாதாரண விவகாரங் களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்த விலை உயர்வு குறித்து எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். ஆவின் பொருட்கள் தொடர்ந்து விலைகள் உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மாநில அரசு மீதான அதிருப்தியை அதிகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் பால்,...
www.patrikai.com
தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்க இலக்கு! அமைச்சர் நாசர்
ஈரோடு: தீபாவளி பண்டிகையொட்டி ரூ.250 கோடிக்கு ஆவின் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஈரோட்டில் முகாமிட்டுள்ள அமைச்சர் நாசர், அங்குள்ள ஆவின் கால்நடை தீவன ஆலையை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஆலையின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், பால்வளத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்படும் என்றவர்,. ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தால் கடைக்கு சீல் வைக்கப்படும்...
www.patrikai.com
ஆவின் பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ். கடும் கண்டனம்.!
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று முதல் ஆவின் பால் பொருட்கள் 3வது முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மின்கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகஅரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மக்களின் கண்ணீர் திமுக ஆட்சியை அழித்து விடும் என எச்சரிக்கை செய்துள்ளார். மின்கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின்...
www.patrikai.com
பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிக்கிறது! உணவு பாதுகாப்புத் துறை நீதிமன்றத்தில் அறிக்கை…
சென்னை: ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்க விதி அனுமதிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான வழக்கில், உணவுப் பாதுகாப்பு துறை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நெகிழி உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில்...
www.patrikai.com