வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்
https://patrikai.com/due-to-flood-aadiperukku-celebrations-suspended-at-kollidam/ via @[email protected]

#AadiPerukku #Kollidam #Cauvery #CauveryRiver #flooding #FloodSituation

வெள்ளப்பெருக்கு : கொள்ளிடத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடியோர் வெளியேற்றம்

திருச்சி வெள்ளப்பெருக்கு காரணமாகக் கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாடியவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் பெய்து வரு கடும் மழை காரணமாகக் காவிரி ஆற்றில் அதிகமாக நீர் வெளியேற்றப்பட்டது.   இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  பிறகு நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் வெள்ளம் குறைந்தது.  தற்போது கர்நாடகாவில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் நீர் திறக்கப்பட்டு கொள்ளிடத்தில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....

www.patrikai.com

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை
https://patrikai.com/tomorrow-aadi-perukku-district-administration-bans-bathing-in-cauvery-river-and-darshan-in-paramathi-velur-areas/ via @[email protected]

#aadiperukku #Namakkal #Paramathivelur #cauvery #MetturDam #Riverside #FloodSituation #banned

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில்,  காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நாளை ஆடிப்பெருக்கு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது டெல்டா மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் புதுமணத் தம்பதிகள்,  சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்த...

www.patrikai.com