
கர்நாடகா ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில் சிக்கிய நபருக்கு கோவை கார் குண்டு வெடிப்பிலும் தொடர்பா? பரபரப்பு தகவல்கள்…
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்டோ குண்டு வெடித்த சம்பவத்தில், தீவரவாதிகளின் சதி இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும், குண்டுவெடிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷரீக் என்பவர் கோவையில் சிம் கார்டு வாங்கி இருப்பதும், கோவையில் சில நாட்கள் தங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது. சமீபத்தில் கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம்...
www.patrikai.com
கோவை கார்வெடிப்பு: சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களின் வீடுகளில் சோதனை..
சென்னை: கோவை கார்வெடிப்பில் உயிரிழந்த முபின், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ள நிலையில், சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய பலரது வீடுகளில் இன்று என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் வெடிப்பை நடத்திய ஜமேஷா முபின் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், தற்கொலை பயங்கரவாதியாக மாறியிருந்ததும் தெரிய வந்தது. அவனுக்கு உதவிய மேலும் 6...
www.patrikai.com
43 இடங்களில் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனை நிறைவு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்! என்ஐஏ தகவல்
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, இன்று காலை முதல் சென்னை, கோவை உள்பட தமிழகத்தில் 43 இடங்களில் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை முடிவடைந்துள்ளது. இந்த சோதனையின்போது, டிஜிட்டல் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிஎஃஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில், அந்த கட்சியினரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட...
www.patrikai.com
"கோவை குண்டு: அண்ணாமலைக்கு எப்படி தெரிகிறது?" பீட்டர் அல்போன்ஸ் பேட்டி
YouTube
கோவை கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை…!
கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம், அதைத்தொடர்ந்து, பயங்கரவாதிகள் கோவையின் 5 இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்த செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த வழக்கில் கைதான 5 பேரின் வீடுகளில் இன்று போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல்...
www.patrikai.com
கோவை கார் வெடிப்பு விசாரணையை ஏற்றது என்ஐஏ! முதல் தகவல் அறிக்கை பதிவு…
டெல்லி: தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷ் முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முபின்...
www.patrikai.com
கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!
கோவை: கார் வெடிப்பில் உயிரிழந்த பயங்கரவாதி என கருதப்படும் ஜமேஷா முபின், குண்டு தயாரிக்கும் வேதிப்பொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள், அவரது டைரியில் இருந்து கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 23ந்தேதி அதிகாலையில் கோவை கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பாக வெடித்து சிதறியது. இதில் அந்த காரில் இருந்த முபின் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார். பெரும் பரபரபபை ஏற்படுத்திய இந்த...
www.patrikai.com
கோவை கார் குண்டு வெடிப்பு: என்ஐஏ விசாரணைக்கு முதலமைச்சர் பரிந்துரை…
சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக இன்று காலை என்ஐஏ அதிகாரிகள் கோவை வந்து விசாரணை நடத்திய நிலையில், முதலமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏவுக்கு மாற்ற கோரிக்கை உட்பட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கோவை உக்கடம் பகுதியில்...
www.patrikai.com