A Complete Guide to Hospital Birth Options with OSHC or OVHC Pregnancy Cover in Australia
Visit: https://getmypolicy.online/blogs/hospital-birth-options-with-oshc-ovhc-in-australia
#OSHC #OVHC #PregnancyCover #AustraliaHealthcare #MaternityCare #InternationalStudents #OverseasVisitors #HospitalBirth #PrivateHospital #PublicHospital #HealthInsuranceAustralia
தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை – அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
https://www.patrikai.com/free-treatment-in-private-hospitals-zero-delay-wards-in-all-govt-hospitals-minister-ma-subramanian-informed/
#zerodelay #subramanian_ma @Subramanian_ma@twitter.com #COVID19 #coronavirus #GH #privatehospital #patrikaidotcom
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கும் அவலம் உருவாகி உள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்களிடம், பல மருத்துவமனைகள் மனிதாபிமானமின்றி சிகிச்சை...
வரிசைப்படி இல்லாமல் பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகள்
https://www.patrikai.com/tn-health-department-cautioned-private-hospitals-for-corona-vaccinating-to-vips-out-of-turn/ #healthdepartment #cautioned #privatehospital #CoronaVaccine #VIP #vaccination
சென்னை பதிவு வரிசையைத் தாண்டி பிரபலங்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன் கட்ட சுகாதார பணியாளர்கள் என்னும் வரிசையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசிகள் போடும் பணி அரசு மருத்துவமனைகளில் தொடங்கி அதன்பிறகு அந்த பணி தனியார் மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மருத்துவமனைகளில் தடுப்பூசி போட...
கொரோனா சிகிச்சையளிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் எவை? – பட்டியல் வெளியீடு!
https://www.patrikai.com/list-of-private-hospitals-released-for-corona-treatment/
#privatehospital #treatment #corona #lockdown #COVID #COVID19 #COVID2019
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றியவர்களுக்குச் சிகிச்சையளிக்க, 135 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த விபரங்கள் அடங்கியப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை, கொரோனா வைரஸ்
மதுரையில் சிகிச்சைக்கான பணத்திற்காக நோயாளியின் உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக தனியார் மருத்துவமனை மீது நோயாளியின் மனைவி புகார் அளித்துள்ளார்.
மதுரையில் சிகிச்சைக்கான பணத்திற்காக நோயாளியின் உறுப்புகளை விற்க நிர்பந்தப்படுத்துவதாக தனியார் மருத்துவமனை மீது நோயாளியின் மனைவி புகார் அளித்துள்ளார். மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி என்பவர் தேநீர் கடை வைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திடீரென இவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரூ.5 லட்சம் செலவில் வீரபாண்டியின் உடல்நிலையை சரி செய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து 6 மாதம் சிகிச்சை அளித்து வீரபாண்டி குடும்பத்தினரை ரூ.1 கோடி வரை மருத்துவ செலவு செய்ய வைத்துள்ளதாக தெரிகிறது. தனது சொந்த வீடு மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து சிகிச்சைக்கான பணத்தை செலுத்திய நிலையில், கடந்த 7ஆம் தேதி வீரபாண்டி முளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய மீதித்தொகையை கட்டுமாறும் கூறியிருக்கின்றனர். இந்நிலையில் தனது கணவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வீரபாண்டியின் மனைவி நிதியா வேதனையுடன் கூறியுள்ளார். ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை இழந்த முகேஷ் அம்பானி .. காரணம் இதுதான் அத்துடன் ரூ.1 கோடி ருபாய் செலவு செய்த நிலையில், மேலும் தங்களிடம் கட்டணம் செலுத்த பணம் இல்லை என நித்யா தெரிவித்துள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் வீரபாண்டி மூளைசாவு அடைந்ததால், அவரது இதயம், கிட்னி, கண் ஆகியவற்றை விற்பனை செய்து மருத்துவத்திற்கான பணத்தை எடுத்துக்கொள்வோம் என மிரட்டியதாக நித்யா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனுவும் அளித்துள்ளார். இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார் அளிக்கமாறு காவல்துறையிடம் அவர் முறையிட்டுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் மருத்துவரிடம் கேட்ட போது, வீரபாண்டி உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், அவர் மூளைச்சாவு அடையவில்லை எனவும் கூறினார். நித்யா மருத்துவமனையிடம் ரூ.50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், இல்லையென்றால் மருத்துவமனையை ஒருவழி செய்துவிடுவோம் எனக் கூறியதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வீரபாண்டி குடும்பத்தினர் சிகிச்சைக்காக ரூ.97 லட்சம் செலவு செய்யவில்லை எனவும், ரூ.27 லட்சம் மருத்துவமனைக்கும், 11 லட்சம் மருந்தகத்திற்கும் கொடுத்துள்ளதாக கூறினார்.