
‘யூ டியூபர்’ மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு! மாரிதாஸ் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு…
டெல்லி: பிரபல 'யூ டியூபர்' மாரிதாஸ் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசின் மனுவுக்கு மாரிதாஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. திமுக அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களையும், குற்றச்சாட்டுக்களையும் பிரபல பத்திரிகையாளரும், யூடிபருமான மாரிதொடர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால், அவர்மீது தமிழகஅரசு பல்வேறு வழக்குகள் போட்டு அவரை முடக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே மறைந்த...
www.patrikai.com
யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி
சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்ற போது குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரபல யுடியூபர்...
www.patrikai.com
மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்
சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது. பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார். இவர் தனது சமூக வலை தளங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து மதுரை திமுக நிர்வாகி பாலசுப்ரமணியன் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரி தாசை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி...
www.patrikai.com
மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்
சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு விமர்சகர் ராமசுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில், மாரிதாஸ் செய்தது தேசதுரோகம் என்றும், ஆமாம் மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.
www.patrikai.com