குறைதிருத்தி வாழ்வினிக்க நேர்வழிச் சேர்ந்த
நிறைவாழ்வு ஆசான்கொ டை.
24
குறைதிருத்தி வாழ்வினிக்க நேர்வழிச் சேர்ந்த
நிறைவாழ்வு ஆசான்கொ டை.
24
கனவினைக் கொன்றாய் கருத்தினைக் கொன்றாய்
விளைவுகள் கொல்லும் உனை.
25
பசிக்கனவு தேடு இலட்சந் தரின்நல்
பயில்மன் றமுந்தரும் நாடு.
26
துயரிலா வாழ்வென் றுமினித் திடாதுயர்
நன்மை உறுத்தும் வழி.
27
செலவினைப் பார்த்துநல சேவை மறந்த
வணிகம் இழக்கும்நல் பேர்.
28
நல்லாட்சி என்பார் நலமொன்றுஞ் செய்திடார்
ஆளத் தெரியாமூ டர்.
29
எதிர்கேள்வி கேட்டால் துரோகியென்றே தூற்றிடுவார்
தேர்தலில் தோற்றேப்போ வார்.
30
விழித்திறக்க வீழ்ந்தாய் மனத்தினில் நித்தம்
விழித்திருக்க வைத்தாய் எனை.
31
நின்னின்சொல் லென்ற அமிழ்து அதையேந்தும்
என்மன மென்னுங்கோப் பை.
32
கடினம் எனவேக் கடந்திடில் என்றும்
கடினம் கடப்ப தில.
33
எனதிர வின்நில வென்றிட நாணியே
மேகத் தொளிந்த முகம்.
34
வெல்வது யாரோ பகைமூளும் போர்தனில்
தோற்பது நல்மனி தம்.
35
வேளோண் விழிவழிநீர் வீழா திருக்க
விண்மழைநீர் மண்ணின் விழா.
36
மாரிதருங் கொண்டலைக் கண்டதும் தன்னழகு
பீலிகொண் டாடும் மயில்.
37
வானீயும் சீர்மழை தன்னில் நனைய
மழலையா யான மனம்.
38
நீர்நிலை ஏரி தனில்வீடு கட்டிமழை
நீரில் தவிக்கும் நகர்.
39
வீழ்ச்சி திருப்பம் அணையென ஆயினும்
வாழ்வுமுன்னே செல்லும் நதி.
40
அணையா டணைந்திருந் துமடை திறந்ததும்
பாய்ந்தோ டிவரும் நதி.
41
சூரியக்க திர்தனை நீர்கொண்டல் மூட
விரியும் எழில்வான வில்.
42
பாலைநாட்டில் நீரினில் தோரணம் நம்நாட்டில்
பாலையாய் மாறுதே ஆறு.
43
தரநீயார் என்றேகேள் பெண்ணே விடுதலை
நானெனக் கீந்த தென.
44
தமிழ்ப்பால் உடையன்பால் முப்பால் தனையீந்த
தன்னிகரில் லாவள் ளுவன்.
45
கல்லூரி காலங்கள் நீங்காது நின்றிடும்
உள்ளம் மறந்திடு மோ?
46
காக்கும் கடல்நோக்கி நிற்பவர் கண்ணீரில்
மூழ்கும் அசையா அரசு.
47
புரிந்தும் புரியாக் கருத்தினைத் தேற்றி
இயம்புதல் நற்கவி யாம்.
48
வயல்தன்னில் நற்பயிர் செய்து நிதம்நம்
உயிர்காக்கும் நல்லுழ வன்.
49
கண்ணாட்டி உன்னிரு கண்கள் எனைநானே
கண்டிடும் கண்ணா டியோ.
50
குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.
51
பிம்பங்கொண் டாயிரம் காதைகள் செய்திட்டீர்
பிம்பம்வீ ழவீழும் புகழ்.
52
உப்பிட்ட மாவைக் குழித்தட்டில் இட்டவித்து
தட்டினில் இட்டயிட் லி.
53
புதுமை யெனவே புதிதாய் மலரும்
கதிரின் விடிநற்கா லை. 54
நதியின் தடமது ஒன்றே இருப்பினும்
ஓடிடும்நீ ரோபுதி தே. 55
நாடகமாய் ஓடிடும் வாழ்வினில் ஒவ்வொரு
காட்சிகா ணப்புதி தே. 56
கருவில் மிதந்து நெடுந் துகில்கலைய
ஓவென அழல்புது மை. 57
காவியின் காவியம் காற்றில் பறந்திட
போட்டியில் வென்றநோட் டா.
59
தனிமை தருமமைதி ஆழி நிலத்து
நெருங்க அலையுங் கடல்.
60
நியூட்டன் முதல் விதி (குறள் வடிவில்)
நிற்ப தியங்கிலை ஊர்வது நிற்றலிலை
ஓர்விசைசெ யல்படாவி டில்.
61
நியூட்டன் இரண்டாம் விதி (குறள் வடிவில்)
இயங்கு பொருளதன் விசையோ நிறையும்
முடுக்கத்து நேர்தக வாம்.
62
நியூட்டன் மூன்றாம் விதி (குறள் வடிவில்)
ஓர்வினைக் கோர்சம மானவெதி ரான
வினையுண்டு என்ப தியைபு.
63
ஆற்றல் அழிவின்மை விதி:
வடிவங்கள் ஒன்றது மற்றதாய் மாறிடும்
ஆக்கம் அழிவிலாதாற் றல்.
64
ஆர்க்கிமிடீஸ் மிதத்தல் விதி
வெளியேறு நீரின் எடையோ சமமாம்
மிதவைத் தருவிசைக் கே.
65
பாஸ்கல் விதி:
அடைத்துள்ள நீர்மத்தே ஈயுமழுத் தம்பரவும்
எத்திசையுஞ் சீரென வே.
66
பாயில் விதி:
அழுத்தமும் கொள்ள ளவுமெதி ராம்வளி
வெப்பநிலை மாறா விடில்.
67
ஓம் விதி:
மின்கடத்தி பாய்ந்திடு மின்னோட்டம் நேர்தகவாம்
மின்கடத்தி மின்னழுத்தத் திற்கு.
68
கிர்ச்சாஃப் மின்னோட்ட விதி
சந்தியில் பாய்ந்திடு மின்னோட்டம் தம்மின்
குறியியல் கூட்டல் சுழி.
69
கிர்ச்சாஃப் மின்னழுத்த விதி
மூடியமின் சுற்றினில் மின்னழுத் தங்கள்
குறியியல் கூட்டல் சுழி.
70
கிர்ச்சாஃப் நிறமாலை விதி 1:
அடர்வளி நீர்மதிடம் தூண்டிட ஈனும்
தொடரலைக் கற்றைத் தனை.
71
கிர்ச்சாஃப் நிறமாலை விதி 2:
மெல்வளி தன்னை அருட்டிட ஈனும்
கதிரலைக் கற்றைத் தனை.
72
கிர்ச்சாஃப் நிறமாலை விதி 3:
மெல்வளி தன்னில் தொடரலை பாய்ச்ச
கிடைப்பது உட்கவர் கற்றை.
73
வாழ்வினில் ஏமாந்தோர் விட்டிடும் பெருமூச்சு
வீழ்த்தும் புயலெனச் சூழ்ந்து.
74
கோடையில் வெண்பனியோ என்றே நினைத்தேன்
காய்ந்துடை பொங்கர்தன் காய்.
75
பொங்கர் - இலவம்
மாசுப் புகையெழத் தீயிடல்நன் றோமனத்து
மாசுநீங்கத் தீயிடற்போ கி.
76
விதைநெல் லெடுத்தியற் கைக்குப் புதுநெல்
படைத்திடும்பொங் கற்திரு நாள்.
77
விண்ணது ஆழியாய் கொண்டலோத் தீவென
நீந்திக் களிக்குங்கா கம்.
78
பிடித்தோர் விரல்பற்றித் துள்ள மகிழ்ந்து
நடந்த மழலைக்கா லம்.
79
உணர்ச்சிப் பெருக்கெடுக்க பேசிடுவார் நம்முள்
ளுணர்வு குருடாக்கி யே.
80
மெய்யெனப் பொய்யினை வீசிடு வார்நாம்
மெய்யறியோ மென்றெண்ணி யே.
81
மூங்கில்தண் டில்துளை யிட்டுத்தீ தன்னிலே
வாட்டிய தேனிசைக்கு ழல்.
82
கானா இசை:
பட்டவலி சொல்லும் உறவென ஊர்கூடிவாழ்
இன்பமுஞ் சொல்லும் இசை.
83
வாழ்த்துக்குறள்
புகழொடு பேரும் நனிதினிவாழ் வுஞ்சேர்
மகிழ்திகழ் வாழ்த்துனக் கே!
84
கொண்டலில் சேர்ந்தனீ ராவி குளிர்காற்று
கொள்ளப் பொழியும் மழை.
85
பொதும்பழித்து வீடுகள் கட்டிப் பழிப்பார்
பொதும்புறை யானை புகின்.
86
விண்மீன் பொதுளியி ருக்குமிருள் வானிலவள்
நின்றே பொதுண்ட மதி.
87
பொதுள் - அடர்ந்த, நிறைந்த