
நாளை ஒய்வு பெறுகிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்
புதுடெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் நாளை ஒய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை ஏற்கனவே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமனம் செய்துள்ளார். இதையடுத்து நாளை மறுதினம் அவர் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். நாளையுடன் யுயு லலித் ஓய்வு பெறும் நிலையில், நாளை அரசு விடுமுறை என்பதால் இன்று அவர் தலைமையிலான அமர்வு மேற்கொள்ளும் வழக்கு விசாரணையே கடைசி விசாரணையாகும். இதனால் அந்த விசாரணையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
www.patrikai.com
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் புதிய நடைமுறையால் விறுவிறுவென வழக்குகள் விசாரணை! 3,147 வழக்குகள் தள்ளுபடி….
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் கொண்டுவந்துள்ள புதிய நடைமுறையால், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணை விறுவிறுவென நடை பெற்று வருகின்றன. மேலும், 3,147 வழக்குகள் தள்ளுபடி, 1200 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அதாவது, 49-வது தலைமை நீதிபதியாகஉதய் உமேஷ் லலித் ஆகஸ்டு 27ந்தேதி பதவி ஏற்றார். இவர் வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடுதல், வழக்குகள் விசாரணை, அரசியல்சாசன அமர்வு விசாரணை போன்றவற்றில் புதிய நடைமுறையை செயல்படுத்தி உள்ளார். ஒவ்வொரு அமர்விலும்...
www.patrikai.com
ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா? அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமைநீதிபதி யுயு லலித்…
டெல்லி: ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை விடுவிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க, தலைமைநீதிபதி யுயு லலித் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில் அரசியல் சாசன அமர்வை அமைத்து உத்தரவிட்டார். ஆயுள் தண்டனை பெறும் கைதிகள், 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் பல கைதிகளை நன்னடத்தையின் பேரில், முக்கிய தலைவர்கள் பிறந்தநாள், நாட்டின் சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களில் முன்கூட்டியே மாநில அரசுகள் விடுதலை செய்து வருகின்றன. இதில் சில...
www.patrikai.com
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்!
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார். இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா ஆகஸ்டு 26-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியை கொலிஜியம் தேர்வு செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி யது. அதன்படி, தற்போது மூத்த நீதிபதியாக உள்ள யு.யு.லலித் உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் முர்மு...
www.patrikai.com
இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக தேர்வாகியிருக்கும் யு.யு.லலித் யார் ?
இந்தியாவின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி ரமணா இந்த மாதம் 26 ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு அடுத்த படியாக தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கப்போவது யார் என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூடி விவாதித்தது. இதில், நீதிபதி என்.வி.ரமணா-வுக்கு அடுத்த நிலையில் சீனியாரிட்டியில் உள்ள யு.யு.லலித் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 64 வயதாகும் யு.யு.லலித் நவம்பர் மாதம் ஓய்வு பெறுவார் என்றும் குறைவான நாட்களே இந்த பதவியில் இருப்பார் என்றும் தெரிகிறது. மகாராஷ்டிரா...
www.patrikai.com