| My Quora Profile: | https://qr.ae/TWpfXf |
| My Quora Profile: | https://qr.ae/TWpfXf |
விலகாத கனவைப்போல் இரவின் மிச்சம்
கலந்திருக்கும் அதிகாலை வானில் நீலம்
இளஞ்சிவப்போ டியைந்திங்கோர் இனிய காட்சி
அளிக்கிறதே, அழகியகார்த் திகைநற் காலை...
இரவுகளோர் தாய்மடிபோல் இனித ணைக்கும்,
வரும்விடியல் தந்தையென மனத்தில் ஊக்கம்
பெருகிடவே 'எழுந்துழைப்பாய்' என்றி யம்பும்,
கருத்திலிதைக் கொண்டெழுக, காலை வணக்கம்!
©2019, Vennkotran.
சாலையிலே சிவப்புநிற விளக்கைக் கண்டால்
'சற்றேநில்' எனப்பொருளாம் - கிழக்கின் வானில்
காலையிலே மிளிர்சிவப்பின் கருத்தோ வேறு
'கனவுகளை நிசமாக்கும் களமாம் ஓர்நாள்
கோலமுடன் மலர்ந்ததுகாண், குதித்தெ ழுந்தே
கொண்டாடி முன்செல்க' என்று ரைக்கும்...
ஞாலத்தின் சுழற்சியினால் நன்றாய் மற்றோர்
நாளிங்குப் பூத்ததுவே, நன்றே கொள்க!
இனிய காலை வணக்கம்...
©2019, Vennkotran.
அதிகாலைச் செவ்வானின் பொட்டலத்தின் உள்ளே
புதுநாள் அழகுப் பரிசு!
The beautiful gift of a new day comes wrapped in dawn's crimson sky!
இனிய காலை வணக்கம் நண்பர்களே...
©2019, Vennkotran.