காலை பூசையில்தான் கவனித்தேன்
சாமிப் படத்திற்குப் பின்னிருந்த
அந்தக் கரப்பானை,
சட்டெனப் பிடித்தெறிய
நீண்ட கையைச்
சடக்கென்று நிறுத்தியது
மூளைக்குள் ஒரு கேள்வி:
ஒருவேளை இது
கடவுளாய் இருந்தால்?
"மெச்சினேன் உன் பக்தியை"
எனும் முன்
நசுக்கிவிடக் கூடாதே!
நசுக்கவா? நமஸ்கரிக்கவா?
என நான்
மனத்திற்குள் பட்டிமன்றம்
நடத்திக்கொண்டிக்கும்போதே
அதன்மீது
மருந்தடித்துவிட்டாள் என்
மனைவி!
©2019, Vennkotran.
