| வலைப்பூ | https://ramvalaimalar.blogspot.com |
| மொழி | தமிழ் |
| தொழில் | பொறியாளன் |
| கீச்சு | twitter.com/atgram |

| வலைப்பூ | https://ramvalaimalar.blogspot.com |
| மொழி | தமிழ் |
| தொழில் | பொறியாளன் |
| கீச்சு | twitter.com/atgram |
புதுமை யெனவே புதிதாய் மலரும்
கதிரின் விடிநற்கா லை. 54
நதியின் தடமது ஒன்றே இருப்பினும்
ஓடிடும்நீ ரோபுதி தே. 55
நாடகமாய் ஓடிடும் வாழ்வினில் ஒவ்வொரு
காட்சிகா ணப்புதி தே. 56
கருவில் மிதந்து நெடுந் துகில்கலைய
ஓவென அழல்புது மை. 57
உப்பிட்ட மாவைக் குழித்தட்டில் இட்டவித்து
தட்டினில் இட்டயிட் லி.
53
பிம்பங்கொண் டாயிரம் காதைகள் செய்திட்டீர்
பிம்பம்வீ ழவீழும் புகழ்.
52
குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.
51
கண்ணாட்டி உன்னிரு கண்கள் எனைநானே
கண்டிடும் கண்ணா டியோ.
50
வயல்தன்னில் நற்பயிர் செய்து நிதம்நம்
உயிர்காக்கும் நல்லுழ வன்.
49
புரிந்தும் புரியாக் கருத்தினைத் தேற்றி
இயம்புதல் நற்கவி யாம்.
48
காக்கும் கடல்நோக்கி நிற்பவர் கண்ணீரில்
மூழ்கும் அசையா அரசு.
47
கல்லூரி காலங்கள் நீங்காது நின்றிடும்
உள்ளம் மறந்திடு மோ?
46
தமிழ்ப்பால் உடையன்பால் முப்பால் தனையீந்த
தன்னிகரில் லாவள் ளுவன்.
45