ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
https://patrikai.com/will-take-a-decision-on-swamys-petition-on-ram-setu-soon-centre-tells-supreme-court/
ராமர் பாலம் விவகாரம்: மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க தொடர்ப்பட்ட வழக்கில், மத்தியஅரசின் பதிலைத் தொடர்ந்து இடையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. வங்கக்கடலில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள மண்திட்டு, ராமர் பாலம் என அழைக்கப்படுகிறது. இந்த ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு...