மொத்தமாக மரணத்தை எதிர்கொள்ளும் எவருமே மகிழ்ச்சியானவரே...
சிறிது சிறிதாக தினம் சிதைந்து, உடலும் உளமும் தினம் அவதியுற்று
உடன் இருப்போரை அண்டி பிழைத்து
அஞ்சி அஞ்சி நாட்களை கடந்து,
எனை கொண்டு போகமாட்டாயா என ஏங்கும் தருணங்களை காணாது இருப்பது நலம்...
வாழும் நாட்களை பயனுள்ளதாக கழித்து இறுதி நாட்களை நோக்கி நடைபோடும் எந்த கிழவனும் கட்டிளங்காளையே...
மிக நீண்ட ஆயுட்காலத்தில் நீங்கள் அதிகம் காணப்போவது உற்றாரை, நேசித்தோரை இழப்பது மட்டுமே...
மரணம் ஒரு அருமையான,முழுமை தரும் முற்றுப்புள்ளி.

