சென்றவர்கள் வாழும் நிலம்.
காலை நடை செல்லும்போது எளிய சுவாரசியங்களை நானே உருவாக்கிக் கொள்ளும் வழக்கம் உண்டு. அதில் ஒன்று மணலில் பதிந்திருக்கும் காலடிகளை கவனிப்பது. பறவைகளின் காலடிகள், நாய்களின் காலடிகள் பெரும்பாலும். கீரியின் தடங்கள் தென்படுவது உண்டு. பாம்பு சென்ற தடங்களை பார்த்திருக்கிறேன். முள்ளம்பன்றி சென்ற தடங்களையும் பார்த்ததுண்டு .பெரும்பாலான தடங்களை நின்று கவனித்து அந்த காலடிகளுக்குரியவர்கள் எப்படி சென்றனர், என்ன செய்தனர், என்ன எண்ணிக்கொண்டனர் என்று யோசிப்பேன். கீரி ,முயல் போன்றவை எப்போதும் மிக வேகமாக ஒரு மறைவிடத்தில் […]
#tamil