பலூனை ஊதிக் கொண்டே இருந்தால் பெரிதாக தானே செய்யும்.

பிரச்சினைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் கவலைகள் தான் அதிகமாகும்.

காற்று உள்ளபோதே, ஊதிய பலூனை விட்டு விட்டால் பார்க்க அழகாக இருக்கும்.

இது போல் நீயும் தோற்றுப் போன நினைவுகளை விட்டு வெளியே வா. எல்லாம் கடந்து போகும் என்ற நம்பிக்கையிலும், இதுவும் மாறிப் போகும் என்ற நிதர்சனத்திலும், எல்லாம் பழகிப் போகும்  என்ற எதார்த்தத்திலும், எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்திலும் கடப்போம்.

முதலில் தாங்க முடியாததாகத் தோன்றும், பின் பரவாயில்லை போல இருக்கும். பின்பு கடந்து விட முடியும் என நம்பிக்கை வரும்.

இறுதியில் இதற்காகவா வருந்தினோம் என மனம் லேசாகி விடும். வாழ்க்கையில் பிரச்சனை என்பது மனிதனுக்கு இவ்வளவு தான். மலை போல் வந்து பனி போல் விலகும்.

#FridayThoughts from #Whatsapp