புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் தோப்புக்கொள்ளை கிராமம் பாப்பாபட்டியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருந்து வந்த ஆதிதிராவிட குடியிருப்பின் மனைகளுக்கு பட்டா வழங்கிடக் கோரி 18-10-22 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.#TNUEF #LandRights
கிராம மக்கள் காலை முதலே சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று குடிசைகள் அமைத்தனர்.அங்கு வருகை வந்த புதுக்கோட்டை கோட்டாட்சியர், ஆலங்குடி வட்டாட்சியர், புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்து குடிசைகளை அகற்ற முற்பட்டனர்.
பொதுமக்கள் ஜேசிபி எந்திரத்தை தடுத்து நிறுத்தினர். வீரியமான போராட்டம் காரணமாக பட்டா வழங்குவதற்கான எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் ஏற்பட்டது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் தோழர் த.செல்லக்கண்ணு, மாவட்ட தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் அன்புமணவாளன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், சிபிஐ(எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன், திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் வடிவேல்,
ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுசிலா உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநிலப் பொதுச் செயலாளர்