
ஜனவரி 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது! தமிழகஅரசு உத்தரவு
சென்னை: ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மத்திய-மாநில அரசுகள் வழங்கும் ரேசன் அரிசிக்கு தனித்தனியாக ரசீது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில், அனைத்து நியாயவிலை கடைகளிலும் புதிய முறையினை பின்பற்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பொழுது புதிய முறைப்படி அரிசியினை மற்றும் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முதல் ரசீது ஆகவும், அரிசி மற்றும் இதர பொருட்களை இரண்டாவது ரசீதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும்...
www.patrikai.com
பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கும் பணி 27ந்தேதி முதல் தொடங்கும்! தமிழகஅரசு
சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு வழங்குவதற்கான வீடு வீடாக டோக்கன் வழங்கும் நடவடிக்கை 27ந்தேதி (நாளை) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு, பொங்கல் பரிசாக ரூ.1000 உடன் பச்சரி, சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதற்காக டோக்கன் வழங்கும் பணி வருகின்ற நாளை முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. திமுக...
www.patrikai.com
2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி
சென்னை: 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றார். தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தை விட 3 முதல்...
www.patrikai.com
பொங்கல் பரிசுத்தொகை வங்கி கணக்கில் செலுத்த முடிவு? தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு இல்லை என தகவல்…
சென்னை: தமிழ்நாட்டில் 14,86,000 குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்குகள் இல்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்து உள்ளது. பலருக்கு குடும்ப அட்டைகள் இருந்தும் அவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காததால், வங்கி கணக்கு இல்லை என தரவுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி, தமிழகஅரசு, பரிசுத்தொகுப்புக்கு பதிலாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில்...
www.patrikai.com
ரேசன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தின் 40 இடங்களில் 2வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை…
சென்னை; ரேசன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமான 40 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. வரி ஏய்ப்பு புகார் எழுந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்ற னர். தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் கிளை நிறுவனங்கள், 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனை...
www.patrikai.com
ரேசன் கடைகளுக்கு பருப்பு பாமாயில் சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் தொடர்புடைய 40 இடங்களில் ஐடி ரெய்டு!
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு தேவையான பருப்பு பாமாயில் உள்பட உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். வரிமுறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. பொது...
www.patrikai.com
முன்னா, சோட்டு சிலிண்டர்கள் இன்று அறிமுகம்
சென்னை: முன்னா, சோட்டு சிலிண்டர்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1,515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டும். அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர்...
www.patrikai.com
பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு! ஜெயரஞ்சன் தகவல்
சென்னை: பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி மற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், குறைவாக இருப்பதாகவும், ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உணவு சம்மந்தமான பொருட்கள்...
www.patrikai.com
ரேஷன் அரிசியை வாங்கி வீணாக்காதீர்கள்! பொதுமக்களுக்கு ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்…
சென்னை: ரேஷன் அரிசியை வாங்கி வீணாக்காதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார். கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று திருவள்ளூர் பகுதியில், அரசின் நியாய விலை கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். ரேசன் கடைகளுக்கு அரிசி அனுப்பப்படும் அரிசி உற்பத்தி செய்யப்படும் நவீன அரிசி ஆலைக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு...
www.patrikai.com
தேசிய கொடி வாங்கினால் மட்டுமே ரேஷனில் பொருட்கள் வழங்கப்படும் : ஹரியானா அலம்பல்… வீடியோ
ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன் பொருள் வாங்க செல்லும் மக்களிடம் ரூ. 20 கொடுத்து தேசிய கொடி வாங்கினால் தான் பொருள் வழங்கப்படும் என்று அங்குள்ள கடை ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அன்றாடம் ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் ரேஷனில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டினியை போக்கிவரும் தினக்கூலிகள் பலரும் இந்த...
www.patrikai.com