After #Madapuram incident, unauthorized special teams setup by individual police units are ordered to be disbanded
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சிகரமான தகவல்….
https://patrikai.com/shocking-information-in-the-additional-charge-sheet-filed-by-the-cbi-in-the-satankulam-father-and-son-murder-case/ via @[email protected]
சென்னை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறையினரால் தாக்குதலால், அவர்களின் உடலில் ஏற்பட்ட ரத்தக்காயம் காரணமாக, அவர்கள் உடுத்திருந்த லுங்கி (கைலி) முழுவதும் ரத்தம் தோய்ந்திருந்ததால், அதை காவல்துறையினர் தூக்கி குப்பை தொட்டியில் தூக்கி வீசியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2020 ஜூன் 20 ஆம்...
என்னை கொல்ல முயற்சி: சாத்தான்குளம் கொலைக் குற்றவாளியான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் பரபரப்பு கடிதம்… https://patrikai.com/sathankulam-murder-convict-police-inspector-sridhar-sensational-letter-to-the-judge/ via @[email protected]
மதுரை: என்னை கொல்ல முயற்சி நடைபெறுகிறது, சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நீதிபதிக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் (தந்தை -மகன்) காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை...
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: மேலும் 5 போலீசார் கைது…
https://www.patrikai.com/death-of-the-father-and-son-of-sathankulam-more-5-police-officers-arrested/
#Sathankulam #SathankulamMurderCase #Arrest #SathankulamCustodialDeath #patrikaidotcom
தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 போலீசார் கைது செய்யப்பட் டுள்ளனர். ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததாக, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை...
சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை… சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் பேட்டி
https://www.patrikai.com/sathankulam-incident-investigations-with-the-friends-of-police-also-says-cbcid-ig-shankar/
#SathankulamCase #Sathankulam #SathankulamMurderCase #Sathankulampolice #CBCID #patrikaidotcom
நெல்லை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று கூறிய சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீசிடமும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி, சிபிசிஐடி காவல்துறையினர் இந்த வழக்கை உடனே விசாரணையை கையிலெடுக்க கிளை உத்தரவிட்டது. அதன்படி ஜூன் 30-ஆம் தேதி முதல் சிபிசிஐடி...
சாத்தான்குளம் சம்பவம்: காவலர் ரேவதியைத் தொடர்ந்து, அப்ரூவராக மாறும் சிறப்பு காவல் உதவிஆய்வாளர் மற்றும் காவலர்….
https://www.patrikai.com/sathankulam-incident-special-si-and-one-more-police-also-approver-following-women-police/
#Sathankulam #SathankulamPoliceStation #SathankulamMurderCase #SathankulamIssue #SathankulamCustodialDeaths #patrikaidotcom
சாத்தான்குளம்: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், சாத்தான் குளம் காவல்நிலைய பெண் காவலர் ரேவதியைத் தொடர்ந்து, சிறப்பு காவல் உதவிஆய்வாளர் மற்றும் காவலர் அப்ரூவராக மாறுவதாக கூறப்படுகிறது. சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில், மதுரை உயர்நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 5 போலீசாரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த...
சாத்தான்குளம் பெண் காவலருக்கு பாதுகாப்பு, சிபிசிஐடிக்கு பாராட்டு… உயர்நீதின்றம்…
https://www.patrikai.com/security-for-sathankulam-woman-constable-praise-for-cbcid-action-high-court-madurai/
#Sathankulam #SathankulamMurderCase #CBCID #MaduraiHighCourt #patrikaidotcom
சென்னை: சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் குறித்து இன்று விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் மதுரை கிளை, சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமாரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க உத்தர விட்டதுடன் சிபிசிஐடியின் துரித நடவடிக்கைக்கு பாராட்டும் தெரிவித்தனர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த...
ஐ.நா. சபை கண்டனத்தைத் தொடர்ந்து சாத்தான்குளம் செல்கிறார் முதல்வர்?
https://www.patrikai.com/tamilnadu-cm-edappadi-may-be-go-to-sathankulam-soon-after-un-condemned/
#EdappadiPalaniswami @[email protected] #Sathankulam #TamilNadu #SathankulamIssue #patrikaidotcom
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்து முதல்வருக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் சாத்தான்குளம் செல்ல இருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்கு அழைத்துச்சென்ற தந்தை மகனை, சாத்தான்குளம் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதில், அவர்கள் இருவரும் மரணம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக...
எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி! ஐஜி சங்கர்
https://www.patrikai.com/thank-you-to-the-government-of-tamil-nadu-for-our-trust-in-the-court-cbcid-ig-shankar/
#TamilNadu #tamilnadupolice #CBCID #TNGovernment #Sathankulam #patrikaidotcom
நெல்லை: உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழக அரசிற்கும், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிப்பதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினரால் கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மரணம் அடைந்தனர். இந்த விவகாரம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், . இது குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தின் அதிரடி நடவடிக்கை காரணமாக,...