கம்யூனிஸ்ட்டுகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் ரத்த சாட்சியே சேலம் சிறைத் தியாகிகள்...!!! by CPIM Tamilnadu
கம்யூனிஸ்ட்டுகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் ரத்த சாட்சியே சேலம் சிறைத் தியாகிகள்...!!! 17 தோழர்கள் துப்பாக்கிக் குண்டுக்கு பலியானார்கள், 5 தோழர்கள் தடியால் அடித்தே கொலை செய்யப்பட்டனர். 119 தோழர்கள் படுகாயமுற்று இரத்தச் சகதியில் கிடந்தனர். அதில் 63 தோழர்களின் உடலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது. அதில், கை, கால், மண்டை உடைந்தவர்கள் ஏராளம். சேலம் சிறையில் 1950 பிப்ரவரி 11ம் அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உயிரிழந்த தியாகிகளின் நினைவு தினம் இன்று. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக நடந்த இந்த கொடூரம் நடந்து இன்றுடன் 72 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், தோழர்கள் இறக்கும்போது எழுப்பிய "இன்குலாப் ஜிந்தாபாத்”, "புரட்சி ஓங்குக! ", "கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத் " போன்ற முழக்கங்கள் இன்றும் சேலம் சிறையைத்தாண்டியும் கேட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. மனிதகுல விடுதலைக்கான போராட்டத்தில் சேலம் சிறைதியாகிகளின் தியாகம் என்றென்றும் அழியாது, நிலைத்து நிற்கும் #CommunistStruggle #CommunistProtest #SalemPrison #InqulabZindabad #TNPolitics
