
தீர்ப்பு வெளியானதையடுத்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியான நிலையில், அவரது ஆதரவாளர்கள் தீர்ப்பு வெளியானதையடுத்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின்போது இருந்த நிலையே தொடர வேண்டும்...
www.patrikai.com
அதிமுக பொருளாளர் விவகாரம்: வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம்…
சென்னை: அதிமுக பொருளாளர் விவகாரம் தொடர்பாக புதியதாக தேர்வு செய்யப்பட்ட பொருளாளர் தொடர்பாக வங்கிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளனர். அதிமுக கணக்கு வைத்துள்ள கரூர் வைஸ்யா வங்கிக்கு இரு தரப்பும் கடிதம் எழுதி உள்ளனர். அதிமுக பொதுக்குழுவில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதும், ஓபிஎஸ் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, புதிய பொதுச்செயலாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என...
www.patrikai.com
ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன்! பொதுக்குழுவில் நீக்கப்பட்ட ஓபிஎஸ் சொல்கிறார்…
சென்னை: ஈபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நான் நீக்குகிறேன் என அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் கூறினார். மேலும் பொதுக்குழு கூட்டப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார். இரட்டை தலைமை கொண்ட அதிமுகவில் எந்தவொரு முடிவும் எடுக்கப்பட முடியவில்லை என கடந்த 4ஆண்டுகளாக அதிமுக தொண்டர்கள் கூறி வந்த நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமையை தேர்ந்தெடுக்கும் வகையில், பொதுக்குழு உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்தனர், இதையடுத்து, அதிமுக பொதுக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக...
www.patrikai.com
பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ்! தீர்மானம் நிறைவேறியது…
சென்னை: இன்று நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழுவில், ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பிய நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு எதிரான ஓபிஎஸ்-ன் நீதிமன்ற வழக்குகள் பொய்த்துபோனதால், இன்று திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள மண்டபத்தில் கூடி, நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஓபிஎஸ்...
www.patrikai.com
ஓ. பன்னீர்செல்வத்தின் அனைத்து பதவிகளையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி… பொதுக்குழுவில் தீர்மானம்…
அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டம் கூடுவதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 7:15 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். வழியெங்கும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன்...
www.patrikai.com
கொடநாடு: இன்னொரு மரணத்தை தடுக்க வேண்டும்!: அதிரடிக்கும் முஸ்தபா!
YouTube
பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது....
www.patrikai.com
பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்
டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு கூட தடை விதிக்க மறுத்து விட்டது. அத்துடன், இபிஎஸ் மீது ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுப்பதற்கு சாதகமாகவே அமைந்துளளது. இது ஓபிஎஸ் அணியினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது....
www.patrikai.com
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் அழைப்பு!
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை ஏற்க ஓபிஎஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. வரும் 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு அதிமுக பொது குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கொரோனாவ காரணம் காட்டி, பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தால், காணொளி காட்சி வாயிலாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது....
www.patrikai.com