
கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து! காவல்துறையை காய்ச்சி எடுத்த உயர்நீதிமன்றம்…
சென்னை: கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது. குண்டர் சட்டத்தின் மூலம் ஒருவரை எந்த விசாரணையும் இல்லாமல் சிறையில் தள்ள முடியும். அவரை 12 மாதங்கள் சிறையில் அடைக்க முடியும். பிணையும் வழங்கப்படாது. அதனால், திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திமுக அரசை விமர்சிப்பவர்கள்...
www.patrikai.com
100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனியார் நிலத்தில் பணி செய்கிறார்கள்! உயர்நீதிமன்றம் கண்டனம்.!
சென்னை: 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றுபவர்கள் தனியார் நிலத்தில் பணி செய்கிறார்கள், அவர்கள் முறையாக வேலை செய்யவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது. கிராமமக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாடு முழுவதும் 100நாள் வேலைதிட்டம் அதாவது, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக 2005ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாட்கள் வேலை தரப்படுகிறது. கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில்...
www.patrikai.com
ஆன்லைன் சூதாட்டத்துக்கு பெற்றோர்களே காரணம்! உயர்நீதிமன்றம் மதுரை கிளை காட்டம்…
மதுரை: ஆன்லைன் விளையாட்டு, லாட்டரி , சூதாட்டம் ஆகியவை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் பெற முக்கிய காரணம் என்றும், ஆன்லைன் விளையாட்டுகள் சிறார்களுக்கு தெரிய வந்தது எப்படி? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆன்லைன் விளையாட்டு , ஆன்லைன் லாட்டரி பழக்கம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் விளையாடுகிறார்கள், தற்கான விளம்பரங்களும் அவர்களை ஈர்க்கும் வண்ணம் அதிகரித்து வருகிறது. இதனால் தற்கொலைகள் கூட நடக்கின்றன. என நெல்லையை சேர்ந்த நபர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில்...
www.patrikai.com
கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருதா? உயர்நீதிமன்றம் காட்டம்
மதுரை: ' கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது' என தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக விமர்சித்து உள்ளது. தமிழ்நாட்டில் தகுதி இல்லாதவர்களுக்கு கலைமாமணி வழங்கப்படுவதாகவும், அதை திரும்ப பெற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருநெல்வேலியை சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இயல் இசை நாடகம் பிரிவின் கீழ் நடனம்,...
www.patrikai.com
முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது! உயர் நீதிமன்றம் உத்தரவு…
மதுரை: முறையாக அனுமதி பெறாமல் தமிழ்நாட்டில் யாரும் சிலை வைக்கக் கூடாது மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலையை அகற்றி பாதுகாப்பாக வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் ஒரு தரப்பினர் இமானுவேல் சேகரன் சிலை வைத்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சிலையை அகற்ற அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி பாலசுப்பிரமணியன், உயர் நீதிமன்ற...
www.patrikai.com
தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம்! உயர்நீதிமன்றம்
மதுரை: தடுப்புக்காவல் உத்தரவுகளில் சட்ட விரோதங்கள் இருப்பின் அரசுக்கு அபராதம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது. தென்காசியை சேர்ந்த சுனிதா என்பவர், தனது கணவரை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனுவினை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் தடுப்புக்காவல் சட்டத்தில் தனது கணவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு போடும்...
www.patrikai.com
மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட, செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. விதிப்படி 3பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தர விட்டு வழக்கை தள்ளிவைத்தார். தமிழ்நாட்டில் வருவாய் வரும் பெரும்பாலான கோயில்களை தமிழகஅரசு கையப்படுத்தி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதுபோல, தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஆதீனங்கள் தலைமையில் செயல்படும்...
www.patrikai.com
ஜூன் 20ந்தேதி முதல் மதுரை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் முகக்கவசம் கட்டாயம்!
மதுரை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு வருவோர் ஜூன் 20 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டிலும் தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால், பொதுஇடங்களில் முகக்கவசம், சமூக இடைவெளி கடைபிடிப்பது அவசியம் என தமிழகஅரசு வலியுறுத்தி வருகிறது. பள்ளிகளில் முக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த...
www.patrikai.com
கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள்: மதுரை கிளை நீதிபதி யோசனை
மதுரை: கிராமங்களில் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள் என்று மதுரை கிளை நீதிபதி ஆர்.தாரணி யோசனை தெரிவித்துள்ளார். பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, இந்த மனுக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறினார். மேலும், கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர்...
www.patrikai.com