டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது
http://bit.ly/39fbwjz
#DelhiCAAClashes #Delhi
டெல்லி வன்முறை: உயிரிழப்பு 46 ஆக அதிகரிப்பு
டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌ற ‌அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக சிலர் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சிறிது நேரத்தில் கலவரமாக வெடித்தது. இந்த கலவரம் நாடு முழுவதும் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கோர நிலையை கட்டுக்குள்‌ கொண்டுவ‌ர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் தற்போது அமைதியை காண தொடங்கியுள்ளன.
மேகாலயா தலைநகரிலும் வன்முறை : 3 பேர் பலி
பதட்டம் நிறைந்த பகுதிகள் அனைத்திலும் காவல்துறையி‌னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இதுவரை ‌2‌54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் அனைத்து பகுதிகளும் கட்டுப்பாட்டில் இருப்பதால் வன்முறை நிகழ்வதாக வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்து‌றை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி ‌கா‌‌வல்துறை எச்சரித்துள்ளது.
கதாநாயகனாக கிருஷ்ணா.. தமிழில் ரீமேக் ஆகும் ‘பெல் பாட்டம்’!
இதனிடையே வன்முறையால் சேதமான பகுதிகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு இடமாக சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியதோடு சேதவிவரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில் டெல்லியில் இயல்பு நிலை மிக வேகமாக திரும்பி வருவதாக அம்மாநில காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய‌ அவர், கடந்த 60 மணி நேரத்தில் எந்த அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்றும் கூறினார். இந்நிலையில் இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் வன்முறை நிகழ்ந்த பகுதிகள் அமைதியை காண தொடங்கியுள்ளன: தற்போதைய நிலவரம் என்ன?
http://bit.ly/2Iajf6z
#Delhi #DelhiCAAClashes
இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி
வன்முறை வெறியாட்‌டங்களா‌ல்‌ உருகுலைந்த டெல்லி, தற்போது மீண்டும் இயல்பு நிலைக்‌கு திரும்பியுள்ளது. அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்க நினைக்கும் ‌நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ‌கா‌‌வல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்‌‌களாக வன்முறை‌கள்‌, உயிரி‌ழப்புகள் என போர்களமாய் மாறியிருந்தது வடகிழக்கு டெல்லி. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌ற ‌அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றதே பிரச்னையின் தொடக்கப்புள்ளி. அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்‌பட்ட மோதல் காட்டுத்தீயாய் பல்வேறு இடங்களுக்கு பரவி 45 உயிர்களை பறித்தது.
“தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்”- நடிகர் ரஜினி
இந்த கோர நிலையை கட்டுக்குள்‌ கொண்டுவ‌ர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் அமைதியை காண தொடங்கியுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகள் அனைத்திலும் காவல்துறையி‌னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இதுவரை ‌2‌54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைதியை குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை பரப்பியதாக 2 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் அனைத்து பகுதிகளும் கட்டுப்பாட்டில் இருப்பதால் வன்முறை நிகழ்வதாக வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்து‌றை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வயதான தம்பதியரின் பரிதாப நிலை..!
சமூக வலைத்தளங்களை தீவிரமா‌க கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தவா, தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் வெறுப்புணர்வை தூண்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
டெல்லியின் வன்முறை வெறியாட்டங்களில் வாழ்வை இழந்த ஒரு வயதான தம்பதியின் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது
http://bit.ly/2TcZ6Tx
#DelhiCAAClashes #Delhi
டெல்லி வன்முறை.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வயதான தம்பதியரின் பரிதாப நிலை..!
டெல்லியின் வன்முறை வெறியாட்டங்களில் வாழ்வை இழந்த ஒரு வயதான தம்பதியின் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
டெல்லியில் நிகழ்ந்த வன்முறை பலரது வாழ்வையும் பாதித்துள்ளது. அதில் ஒருவர்தான் நடைபாதை வியாபாரி மகிந்தர். இவர், டெல்லியில் உள்ள சிவ் விஹார் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தனது 64 வயது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் சில இடங்களில் கலவரம் தொடங்கியதும் தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் மகிந்தர் தம்பதி.
சென்னை வருகிறார் ‘தல’ தோனி : ரசிகர்கள் உற்சாகம்
இதனையடுத்து கலவரம் அடங்கிய பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் கலவரத்தில் அவர்களது இல்லம் முழுவதும் தீக்கிரையாகி இருந்தது. இதனால் தற்போது மாற்று உடை கூட இல்லாமல் தெருவில் நிற்கின்றனர்.
வீட்டை இழந்த மகிந்தர் பேசியபோது “செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். எனக்கு வயது 70. எனது மனைவிக்கு வயது 64. இனிமேல் நாங்கள் வேலைக்குச் செல்லவா முடியும்? பொருள்களை எல்லாம் கொள்ளையடித்துவிட்டு வீட்டை தீக்கிரையாக்கிச் சென்றுள்ளனர். எனக்கு இருந்தது இந்தவீடு மட்டும்தான். இதை யார் மீட்டுத் தருவார்கள். பீரோக்களை உடைத்து அதில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்ற கொள்ளைக்காரர்கள் அப்படியே விட்டுவிட்டாவது போயிருக்கலாம். எதற்காக தீ வைத்தார்கள்..? நாங்கள் செய்த பாவம் என்ன..? தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறோம்” என்றார்.
டெல்லி ஷாஹின் பாக் நகரில் 144 தடை உத்தரவு - காவல்துறை குவிப்பு
மகிந்தரின் மனைவி கமலேஷ் பேசியபோது “எல்லாம் அழிந்து விட்டது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். எங்களது எல்லா பணமும் போய்விட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளை அடித்துவிட்டனர். வீடு முழுவதையும் தீ வைத்து கொளுத்தி விட்டனர்” என்றார்.
இந்த தீச் சம்பவத்தில் மகிந்தர் கமலேஷ் தம்பதியின் “வீட்டுப் பத்திரம், ஆதார் அட்டை‌, வாக்காளர் அட்டை, மருந்துச் சீட்டுகள், இன்சூரன்ஸ் ஆவணங்கள் ஆகிய அனைத்தும் அழிந்து விட்டன. அரசாங்கத்திடமிருந்து வந்து கேட்டால் நாங்கள்தான் இந்த வீட்டின் உரிமையாளர்கள் என சொல்லிக் கொள்வதற்கு கூட ஒரு அடையாள அட்டை கூட இல்லாமல் தவித்து நிற்கின்றனர் இந்த தம்பதி.
டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
http://bit.ly/2PuE5Sj
#DelhiRiots2020 #DelhiCAAClashes #Delhi
டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
டெல்லியில் வெடித்த கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. கலவர பூமியாக காட்சியளித்த அந்நகரம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
டெல்லியில் உள்ள வடகிழக்கு பகுதியான ஜாஃபராபாத்-தில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றபோது, கடந்த திங்களன்று இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கற்கள், கட்டைகளை கொண்டு இருதரப்பினரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் டெல்லியின் வடகிழக்கு பகுதிகளுக்கு வன்முறை பரவி ஆங்காங்கே கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு தீவைத்து கொளுத்தப்பட்டன.
வன்முறை தொடர்பாக இதுவரை 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மோதல் தொடர்பாக 1‌6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ரந்தவா தெரிவித்துள்ளார். காவல்துறையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி நிலவரம் குறித்து ஐ.நா கவலை; அரையிறுதியில் இந்திய மகளிர் அணி; இன்னும் சில செய்திகள்
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு சிறப்பு காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது டெல்லியில் இயல்பு நிலை திரும்புவதாக அவர் கூறினார். வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இவை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்கும் முதல் நாடாக மாறும் ஸ்காட்லாந்து..!
வன்முறை நடந்த பகுதியில் சிதறிக்கிடக்கும் கற்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணியில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் மேற்கொண்டு நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக துணை ராணுவப்படை, காவலர்கள், வஜ்ரா வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மவுஜ்பூர், ஜாப்ராபாத் உள்ளிட்ட பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. கடைகளின் வாயிலில் நோ என்சிஆர், சிஏஏ என எழுதப்பட்டிருக்கிறது.
Over 100
#firemen are deployed in the areas of northeast
#Delhi and all the fire stations in the area are provided with extra fire tenders to meet any emergency, Director of Delhi
#FireService Atul Garg said.
#DelhiRiots2020 #DelhiViolence #DelhiCAAClasheshttps://zurl.co/pDYrShops shut, eerie calm prevails in riot-hit areas of northeast Delhi - The Federal
Sporadic violence was reported from riot-hit areas in northeast Delhi, even as an eerie calm prevailed across the neighbourhoods in Jaffarabad, Maujpur, Chandbagh, Gokulpuri and surrounding areas, with the death toll reaching 32 on Thursday (February 27).
Actor
#Rajnikanth sent a strong message to the central government and the Intelligence Bureau condemning the recent
#DelhiRiots2020 which led to the death of more than 30 people and injured many. He also reacted to being called '#BJP Man'. Watch the video to know more.
#DelhiViolence #DelhiFightHate #DelhiCAAClashes #RajinikanthSlamsCentre’டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு’
#DelhiCAAClashesபாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், நாட்டில் என்ன தீங்கு நடக்கும் என்று நாங்கள் தெரிவித்திருந்தோமோ அதுதான் தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. - தொல்.திருமாவளவன்.
#Thirumavalavan #VCK #BJP #Delhi #DelhiRiots #DelhiBurning #DelhiViolence #DelhiCAAClashes
Expressing concern over the
#DelhiCAAClashes,
#Aravinkejriwal in a letter to
#AmitShah demanded that the
#army be deployed to contain violence in the city as the death toll rose to 20.
#DelhiRiots2020 #delhivoilence #DelhiBurnshttps://zcu.io/CCksKejriwal demands army deployment in Delhi as death toll soars to 20 - The Federal
The death toll in northeast Delhi communal violence over the amended citizenship law (CAA) rose to 20 on Wednesday (February 26), according to GTB Hospital authorities. Confirming the same, Chief Minister Arvind Kejriwal too tweeted regarding the updated number of fatalities.