
ஈரோடு இடைத்தேர்தல் எதிரொலி: அதிமுக பொதுக்குழு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்?
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் ஜனவரி 24-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் உலா வருகின்றன. ஈரோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், விரைவில் தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. SC அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி, பொதுக்குழு கூட்டப்பட்ட, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஒற்றை தலைமை விவகாரம் எடப்பாடிக்கும் ஒபிஎஸ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு...
www.patrikai.com
கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது! ஜெயக்குமார்
சென்னை: கூட்டணி குறித்து யாரும் எங்களுக்கு உத்தரவிட முடியாது; நாங்கள் தான் முடிவு செய்வோம் என்றும், மக்களவை தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே இலக்கு என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று முற்பகல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள்,...
www.patrikai.com
“தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கி பாருங்கள்”! அதிமுகவை கைப்பற்ற இபிஎஸ்-ஐ சீண்டும் ஓபிஎஸ்…
சென்னை: தைரியம் இருந்தால் தனிக் கட்சி தொடங்கி பாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் சவால் விடுத்துள்ளார். இதன்மூலம் அதிமுகவை வசப்படுத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இபிஎஸ்-ஐ தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், அவரை தனிக்கட்சி தொடங்குமாறு உசுப்பேத்திவிட்டு, அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ் போடும் நாடகம் இது என விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில்...
www.patrikai.com
அதிமுக அலுவலக மோதல்: அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் ஒன்றரை மணி நேரம் விசாரணை…
சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவைம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் செப்டம்பர் 7ந்தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு...
www.patrikai.com
அதிமுக தலைமை பொறுப்புக்கு சசிகலாவை தொண்டர்கள் விரும்பவில்லை! முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி
விழுப்புரம்: சசிகலாவை அதிமுகவில் தலைமை பொறுப்பேற்க தொண்டர்கள் விரும்பவில்லை என்றும், ஓபிஎஸ் , இபிஎஸ், சசிகலா ஆகிய மூவரும் ஊழல்வாதிகள் என்று அதிமுக முன்னாள் எம்பி கேசி பழனிசாமி கூறினார். விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தலைமையில் அதிமுக தொண்டர்களுடான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.சி.பழனிச்சாமி, அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அடிப்படை தொண்டர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்பது வெளிவருவதில்லை....
www.patrikai.com
53 நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை இல்லை! சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு
சென்னை: "அதிமுக தலைமை அலுவலகம் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டு 53 நாட்களாகிறது. இதுதொடர்பாக காவல்துறை எந்தவொரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேரடி குற்றச்சாட்டு சுமத்திaதுடன், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்றும் தெரிவித்தார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கடந்த ஜூலை 11-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த ஓ.பன்னீர்செல்வம், அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார் . இந்த...
www.patrikai.com
உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 5ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் வரும் 5ந்தேதி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜூன் 11ந்தேதி எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு வெளியான நேரத்தில்...
www.patrikai.com
தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…
சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவுக்காக உழைத்த விகே சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அனைவரும் கட்சிக்காக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ், அழைப்பு விடுத்துள்ளார். இதன் காரணமாக ஓபிஎஸ்ன் தர்மயுத்தம் கேலிக்குரியதாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வரிடம் வேலைக்காரியாக பணியில் சேர்ந்து, பின்னாள் உதவியாளராக இருந்து வந்த சசிகலா, தனது குடும்பத்தினரை கட்சிக்குள் இறங்ககி...
www.patrikai.com